Saturday, November 16, 2013

காகங்களும் தமிழர்களும் பல நூற்றாண்டுகளாக இணைந்தவர்கள்.

 முற்காலத்தில் கப்பலில் செல்லும் தமிழ் கடலோடிகள் தம்முடன் எடுத்துசெல்லும் காகங்களை பறக்க விட்டுப்பார்ப்பார்கள். அவை திரும்பி வந்தால் கரை தூரமாகவுள்ளது எனக் கொள்வர். அவை பறந்தே போய் விட்டால் கரை அண்மையில் உள்ளதென்பர்.
சனி பகவானின் வாகனமாக காகம் கொள்ளப்பட்டுள்ளது. அதனால் இதற்கு சனிக்கிழமைகளில் அநேகமான வீடுகளில் மதிய உணவு வழங்கப்படும். விசேட நாட்களிலும் அதுவும் புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமைகளில் இவற்றிற்கு சாப்பாடு வழங்கவேண்டுமென விரதமிருப்போர் கா கா வென ஓடித்திரிவதை காணமுடியும்.

பெரிய விருந்துகளின் போது காகங்களுக்கு உணவு முதலில் வைத்து விட்டே பந்தியில் உணவு பரிமாறப்படும். முதலில் உண்ட காகம்  இறக்காமலிருந்தாலே பந்தியில் உள்ளவர்கள் உணவை சாப்பிட தொடங்குவர்.

ஒரு பழைய பாடலில்  காகங்களிடம் காணப்படும் ஆறு நற்குணங்கள் பற்றிக் கூறப்பட்டுள்ளது.

காலை எழுந்திருத்தல் காணாமலே புணர்தல்
மாலை குளித்து மனைபுகுதல் – சாலவே
உற்றாரோ(டு) உண்ணல் உறவாடல் இவ்ஆறும்
கற்பாயே காக்கைக் குணம்.
                                                        (விநோத ரச மஞ்சரி)

ஒரு காகம் இறந்து விட்டால் மற்ற காகங்கள் எல்லாம் ஒன்று கூடி அதற்காக அழுவதையும் நீங்கள்  காணமுடியும்.
அதே போல இவை தோட்டிகள் என்றும் அழைக்கப்படுகின்றன, ஏனெனில் ஏதாவது சிறு மிருகங்கங்கள் இறந்துவிட்டால்  இவை ஒன்றுகூடி அதனை தின்று முடித்துவிடும்.
 இவற்றின் இரண்டு கண்களுக்கும் பொதுவாக ஒரு கண்மணியே உள்ளதாக கூறுவர்.
துவக்கை கண்டால் இவை பறந்து விடும்.
முகம் பார்க்கும் கண்ணாடியில் தெரியும் சூரியனைக் கண்டாலும் காகம்  பறந்து விடும்.
இப்போவெல்லாம் மரங்கள் நகரங்களில் இல்லாத படியால் நாய்கள்  எல்லாம் மின்சாரக் கம்பங்களில் ஒன்றுக்கு போகின்றன. காகங்களும் தமது கூடுகளை மின்சாரக் கம்பங்களில் கட்டி முட்டையிட்டு குஞ்சு பொரிக்கின்றன.
முன்னர் போல கூடு கட்ட மரக் குச்சிகள் இல்லாத படியால் மெலிய கம்பிகளை தேடிப்  பிடித்து அதன் மூலம் கூடு கட்டுகின்றன.
பாவம் குயில்கள்தான் நகரங்களில் முன்னர் போல மரங்களில் ஒளிந்திருந்து காகக்  கூடுகளில் முட்டை இட்டு தமது இனத்தை வளர்க்க முடியாமல் அழிந்து கொண்டிருக்கின்றன.
காகங்கள் இரண்டு வகையாக இங்கு பார்க்கப்படுகின்றன.
1. அண்டங்காகம் 2. அரிசிக்காகம்
நாட்டுக்கு நாடு இவை கரைவது (கத்துவது) வித்தியாசமாகவுள்ளது.
காகங்கள் மிகவும் புத்திகூர்மை உள்ளவை.
இதோ ஒரு வீடியோ.

Sunday, November 10, 2013

100 டாலர் (ரூபா 6,250/-) விலைக்கு நச்சு மீனை சாப்பிடும் ஜப்பானியர்கள்.

Fugu எனும் இந்த மீன் வகை கொடிய நஞ்சு கொண்டவை. இவற்றின் ருசியோ அலாதி. இதை ஜப்பானியர்கள் அதிக விலை கொடுத்து விரும்பிச் சாப்பிடுகிறார்கள். இந்த Fugu (ஆற்றுப் பன்றி) மீன்களை ரெஸ்டுரன்ட்களில் சமைக்கும் சமையல்காரர் விசேட லைசென்சை இதற்காகவெனப்  பெற்றிருக்கவேண்டும்.
சமைக்கும் போது எதாவது தவறு நேர்ந்தால் அந்த மீனை உண்பவர் அந்த இடத்திலேயே உடல் விறைத்து மரணமடையலாம்.

திறமையான  சமையல்காரர்கள் சாப்பிடுபவர்களுக்கு ஒரு சிறு அதிர்ச்சி கொடுப்பார்கள் அதாவது அதைச் சாப்பிடுபவர் நாக்கில் சிறிது விறைப்பை சிறிது நேரத்துக்கு ஏற்படசெய்து அம மீனின் நச்சுக்குணத்தை அறியச் செய்வார்கள்.

இதோ அது பற்றிய  வீடியோ.





                                                 இதோ அம்மீனின் படம்.

Saturday, November 9, 2013

உங்களையெல்லாம் ஏமாற்ற எத்தனை வீடியோக்கள்

தினமும் பல வீடியோக்கள்  பணம் பண்ணுவதற்கென யூரியூப்பில் அப்லோட் செய்யப்படுகின்றன. இவை வீடியோ எடிட்டிங் முறையில் தயரிக்கப்பட்டவை  என விற்பன்னர்கள் பலர் கூறியுள்ளனர். எனினும் அவை பலரால் மற்றவர்களுக்கு பாருங்கள் பாருங்கள் என வழங்கப்பட்டு  அதிகளவு பேர்களால் பார்வையிடப்பட்டுள்ளன. அதே போல சில பிரபல இணையத்தளங்களும்  ஆராய்ந்து பார்க்காமல் பலரையும் இவற்றை பார்க்கச் செய்து அவற்றை நம்பும்படி செய்துள்ளன.
இதோ அவற்றில் சில.

மொபைல் போனிலிருந்து  வெளியாகும் கதிர் வீச்சின்  மூலம் சோளன் பொரிப்பதான  வீடியோ.


 5 செக்கனில் ஐஸ் உருவாக்கும் வீடியோ.




குழந்தையை கழுகு தூக்கிச் செல்வதாக தயாரிக்கப்பட்ட ஒன்று.

Thursday, November 7, 2013

நம்பினால் நம்புங்கள். இக்காட்சிகள் இந்தியாவில் மட்டுமே காணக்கிடைக்கும்.

இந்நிகழ்வுகளும் படங்களும் இந்தியாவில் கமெராக்கள் மற்றும் வீடியோக்கள் மூலம் எடுக்கப்பட்டு இணையத்தில் உலா வருகின்றன. பாருங்கள் ரசியுங்கள்.






இதோ இன்னொன்று


Wednesday, November 6, 2013

போதை தரும் பழங்களைத் தின்றுவிட்டு தள்ளாடும் மிருகங்கள்.

மனிதர்கள் மட்டுந்தான் போதையில் தள்ளாடுவார்களா? ஆபிரிக்காவிலுள்ள மிருகங்கள்கூட போதைதரும்
பழங்களை தின்றுவி;ட்டு தள்ளாடும் காட்சிகளை இந்த வீடியோவில் காணலாம். இங்கு காணப்படும் காட்சிகள் சில ஏற்கனவே வெளிவந்த திரைப்படமொன்றில காண்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.; 


இதோ அந்த வீடியோ

Sunday, November 3, 2013

ஆடுகளை மலையுச்சியிலிருந்து தூக்கிச்செல்லும் கழுகுகள்.

மலைகளில் மேய்ந்து கொண்டிருக்கும் ஆடுகளை கழுகுகள் லாகவமாக் தூக்கி சென்றும் அடித்து தள்ளிவிட்டும்  தமக்கு இரையாக்குவதைப் பாருங்கள். வீடியோவின் இறுதிப் பகுதியில் பலவிதமான தாக்குதல்களைக் காணலாம்.
மயிர்க்கூச்செறிய வைக்கும் நம்பமுடியாத அசாத்திய தாக்குதல்கள்.

br>

Saturday, November 2, 2013

குரங்கின் மூலம் காட்டில் தண்ணீர் கண்டு பிடித்தல்.

கட்டாயம் பார்க்கவேண்டிய வீடியோ. குரங்கிற்கு உப்பை  கொடுத்து தின்ன வைத்து விட்டு ஒரு நாள் இரவு முழுவதும் அதை கட்டிவைத்து விட்டு பின் அதனை அவிழ்த்து விட்டால் அது நேராக தண்ணீர் இருக்குமிடத்தை தேடி ஓடும் அதன் பின்னல் தொடர்ந்து ஓடி இந்த காட்டு மனிதனும்  தண்ணீர் இருக்குமிடத்தைக்  கண்டுபிடிப்பதைப் பாருங்கள்.
அதிலும் முக்கியம் அவன் அந்த குரங்கை பிடிக்கும் முறை. குரங்கு கையிலுள்ள உணவை போட்டுவிட்டு  ஓடுவோமென நினைக்காமல் மாட்டுப் படுவதைப் பாருங்கள்.


10 மாத குழந்தை தாயின் பாடலுக்கு மயங்கி கண்ணீர் விடுகின்றது.

இந்த வீடியோவைப் பாருங்கள், தாய் தனது பத்து மாதக் குழந்தையைப் பார்த்து பாடலொன்று பாடவா எனக்கேட்டு விட்டு பாடும் போது சிரித்துக் கொண்டிருந்த குழந்தை கண்களால் கண்ணீர் ஓட அதை ரசித்து கேட்பதைப் பாருங்கள். கடைசியில் தாய் பிள்ளைக்குச் சொல்கிறாள், இது பாடல், பாட்டு மட்டுந்தான் என. நம்ப முடியாத ஒன்று.
மறக்காமல் உங்களுக்கு வேண்டியவர்களுக்கும் இப்பதிவை காண்பியுங்கள்.