Thursday, January 10, 2013

ஆப்ரிக்க தோசையா தமிழ்நாட்டு தோசையா முதலில் தோன்றியது ?

நம்ம ஊரு  தோசையா ஆப்ரிக்க தோசையா முதலில் தோன்றியது என இன்று ஆராய்ச்சி செய்வோமா?
நாம அரிசியையும்   உளுந்தையும்  சேர்த்து  அரைத்து   புளிக்க வைத்து மறுநாள் தோசை சுடுறகிறோம்.
அபிசீனியா என்று  சரித்திர காலத்தில் அழைக்கப்பட்டு தற்போது எதியோப்பியா என்று அழைக்கப்படும் ஆப்ரிக்க கண்ட நாட்டில் எமது தோசைக்கு சமனான உணவு ஒன்று உள்ளது. அதன் பெயா "இஞ்செர" எனப்படும்.
இது உளுந்திலிருந்து செய்யப் படுவதில்லை பதிலாக  teff flour டெப் மாவு என்பதிலிருந்து செய்யப் படுகிறது. இதுவும் தோசை மாவு போல புளிக்கவைத்து பின் தோசை போலவே சுடப்படுகிறது. இந்த தானியம் வெள்ளை, கருப்பு, சிவப்பு எனக் கிடைகிறது எனவே தயாரிக்கப்படும்  "இஞ்செர" வும் இக் கலர்களில் கிடைக்கின்றது.
தொட்டுக்கொண்டு சாப்பிட சட்ட்னி சாம்பார் கிடையாது பதிலாக காரமான உறைப்பு கறிகளை  தொட்டுக்கொண்டு சாப்பிடுவார்கள்.
 இவர்களும் நம்மைப் போல வித விதமான உணவு வகைகளை சமைப்பதில் படு கில்லாடிகள்.

"இஞ்செர"





நம்மூர்  பொண்ணுங்க இல்லிங்க  இவங்க  எதியோப்பிய பொண்ணுங்க..











இது நம்ப  ஊரு தோசைங்கோ - நெட்ல சுட்டதுதாங்கோ.


Tuesday, January 8, 2013

கந்தசாமியும் கப்பலில் வேலையும்.

கந்தசாமி ஊர்ல சைக்கிள் கடை வைத்துக் கொண்டு தானும் தன்பாடுமாக வெற்றிலை வாயும் பிறிஸ்டல் சிகரட்டுமாக இருந்தவன். மனிசியின் ஆய்க்கினை தாங்காமல் கப்பல் வேலைக்கென ஏஜன்ரிடம் காசு கட்டினான்.

கந்தசாமியின் மனிசி எந்நேரமும் நகைகளையெல்லாம் அவனுக்கு முன் நீட்டி பிடித்தபடி இந்தா பாரப்பா மோகன் கப்பல்ல உழைச்சு லட்ச்ச லட்ச்சமா கொண்டுவந்து கொட்டுறான். நீ இப்பவே போய்  ஏஜன்ரிடம் காசு கட்டு இந்தா  இந்த நகைகளை அடவு வை அல்லது வில் என்னக்கு நகை பிரச்சினை இல்லை. நீ நல்ல உழைத்து கொண்டு வரவேண்டும் அது தான் என்னக்கு  தேவை.


ஒருமாதிரி கப்பல் வேலைக்கும் கந்தசாமி வந்து சேந்திட்டான் . பாஷைப் பிரச்சனை. இங்கிலீஷ் தெரியாது. தமிழ் ஆக்கள் இருந்தபடியால் கும்பல்ல கோவிந்தா எல்லோரடையும் சேர்ந்து கூட்டல் கழுவல் என்ன வேலை போகும்.
வீடுச்சாப்பாடும் இல்லை மனிசியும் இல்லை. மனிசியின் போட்டோ முன்னால் இருந்து திட்டுவது இரவில் அடுத்த அறைக்காரனை தூக்கமில்லால் பண்ணிவிடும். காலையில் சாப்பிடபோகும்போது  கந்தசாமிக்கு நல்ல மங்களம்  விழும்.
அண்ணா கோவிக்காதே எண்டு காலில்  விழாக்குறையாக சமாளித்து விடுவான்.
ஒருநாள் கப்பலில் வேலை செய்த ஒருவர் காண்ட்ராக் முடிந்து வீடு சென்று விட்டார். புதிதாக வருபவருக்கு அறை சுத்தம் பண்ணும் பணி கந்தசாமிக்கு கிடைத்தது. எல்லாவற்றையும் அழகாக சுத்தம் செய்து விட்டு பழைய கடலோடி விட்டு சென்ற  சாமான்கள்  சம்பூ, சோப்பு செருப்பு  என்ன எல்லாவற்றையும் கந்தசாமி தனது அறைக்கு கொண்டு போய்விட்டான்.

 கந்தசாமிக்கு இங்கிலீஷ் தெரியாது தானே கொண்டுபோன சாமான்களை இரவு ஒவ்வொன்றாக பாவித்து பார்த்துள்ளான்.

காலையில் வந்து சொன்னான் தனக்கு ஒரு டூத் பேஸ்ட் கிடைத்துள்ளதாகவும்  அதனைப் போட்டு பல் விளக்கினால் நுரை நுரயாகவே வருவதாகவும் கழுவவே முடியவில்லை என்றும் சொன்னான்.
அதை பார்ப்போம்  எண்டு போய்ப் பார்த்தால் அது  டூத் பேஸ்ட் இல்லை ஷேவிங் க்ரீம். அதை அவனுக்கு விளங்கபடுத்தி சொன்னபோது அண்ணை இதை ஆரிட்டையும் சொல்லிப்போடதேங்கோ என்று  கெஞ்சினான் . சரி பிழைச்சுப் போ எண்ண்டு விட்டாச்சு.

இன்னொருமுறை கந்தசாமியும் கப்டனும் பேசுவதை கேட்க முடிந்தது.
கப்டன் இங்கிலீஷ்ல்  சொன்னான் இதை  முதலில் மூடு
கந்தசாமி ஓகே சார் .

கப்டன் மீளவும் இங்கிலீஷ்ல்  சொன்னான் இதை கழுவி வை
கந்தசாமி ஓகே சார் .
இப்படியாக கப்டன் 4 - 5 வேலை சொன்னான்  கந்தசாமியும் எல்லாத்துக்கும்  ஓகே சார், ஓகே சார் என்று சொன்னான்.


அடே கந்தசாமி கப்டன் இங்கிலீஷ்ல சொன்னதெல்லாத்துக்கும் ஓகே சார், ஓகே சார் எண்டியெ உனக்கு இங்கிலீஷ் விளங்குமாடப்பா?
நீங்கதான் பக்கத்தில நிண்டு கேட்டனீங்க தானே அதுதான் ஓகே சொன்னனான.
என்னென்ன வேலை அவன் சொனவன் அண்ணை எண்டானே பார்க்கலாம்

கடைசியாக கிடைத்த செய்தியின் படி மோட்டார் சைக்கிள் ஓடத் தெரியாத கந்தசாமி கப்பல் காசில் புதிதாக ஹோண்டா மோட்டார் சைக்கிள் ஒன்று வாங்கி முதன் முதலாக அதில் கோவிலுக்கு போவோமென்று சொல்லி மனிசியையும்  பினால் ஏற்றிக்கொண்டு  அதனை  ஸ்டார்ட் பண்ணி நேராக ஓடிக் கொண்டுபோய் லைட் போஸ்டில் அடித்து முழங்கால்  சில்லு உடைந்து வைத்தியசாலையில் இருப்பதாக கேள்விப்பட்டோம்.

Monday, January 7, 2013

காமெடி கதைகள் 2

சில வருடங்களுக்கு முன்னர் ரேடியோவில் கேட்டது. சத்தியமாக சொல்லுகிறேன் இது என்னுடைய கதையல்ல. உரிமையாளர் இருப்பின் உரிமை கோரலாம்.
ஓரு ஊருக்கு நம்ப கதாநாயகன் படப்பிடிப்பு சம்பந்தமாகச் சென்றிருந்தார். அவ்வூர் பெரியமனிதர் ஒருவர் அவருக்கு விருந்து வைக்க வேண்டுமென்று அழைப்பு விடுத்தார். மறுக்க முடியாமல் கதாநாயகனும் குறித்த நேரத்தில் பெரியமனிதர் வீட்டுக்குச் சென்றார்.
சிறிது நேர உரையாடலின் பின் வீட்டுக்காரர் தட்டிலா வாழையிலையிலா உணவருந்த விரும்புகிறீர்களெனக் கேட்டார். நம்ப கதாநாயகனும் பெரிதாகத் தலையாட்டியபடி  வாழை இலையிலேயே சாப்பிட்டுருவோமேன்னாரு.


இதைக்கேட்டதும் வீட்டுக்காரர் முகம் வாடிவிட்டது. தம்பி இருந்த வாழை இலையெல்லாம் முன்னாடி வந்தவங்க பாவிச்சிட்டாங்க. இருந்தாலும் அதுல நல்ல ஒண்ண எடுத்து கழுவிக் கொண்டாரேன்னார். நம்பாளு பாஞ்சு விழுந்து நா தட்டிலேயே சாப்பிட்டுக்கிறேன்னு குழறத் தொடங்கினார்.

ஒருமாதிரி உணவருந்தி முடிந்த பின்னர் பெரியமனிதருக்கு நன்றி சொல்லிவிட்டுப் புறப்பட்டார். நம்ப கதாநாயகன் வாசலருகே சென்றிருக்கமாட்டார் மீள வந்து 'சரி ஐயா, நான் வரும் போதும் சரி, போகும் போதும் சரி, உங்க நாய் வாலாட்டிக் கிட்டிருந்தது. ஆனா நான் சாப்பிடும்போது மட்டும் அது ஏன் என்னப்பாத்து உறுமிக்கிட்டேயிருந்திச்சு என்றார்.'
ஓ அதுவா, நம்ம டாமிக்கு யாராச்சும் அதோட தட்டில சாப்பிட்டா அவ்வளவா பிடிக்காது. நீ;ங்க அதோட தட்டில சாப்பிட்டிங்கள்லா, அதுக்குத்தான் அது உறுமிக்கிட்டு இருந்திச்சு என்றார்.

நம்ப கதாநாயகன் அவரை முறைத்துப் பார்த்துவிட்டு வாசலுக்கு வெளியே வந்து அங்கிருந்த திண்ணையில அமர்ந்திருந்த பொக்குவாய்ப் பாட்டிக்கு அருகிலமர்ந்தார்.
பாட்டிக்கு அருகில் வெற்றிலைப் பெட்டியைக் கண்டதும் இவருக்கு வெற்றிலை போட ஆசை வந்து பாட்டி ஒரு வாய் வெற்றிலை கொடேன் என்றார்.

இந்தாப்பா ஒரு முழுப்பாக்கும் ஒரேயொரு வெற்றிலையும் தான் இருக்கிறது எனக்கொடுத்தாள்.

நம்ப கதாநாயகனும் ஒரே கடியில் பாக்கை உடைத்து வெற்றிலையுடன் மெல்லத் தொடங்கினார். இதைப் பார்த்த பாட்டி அடேங்கப்பா உன் பல்லுங்க சரியான ஸ்ராங்கு. நானும் ஒரு வாரமா இந்தப் பாக்கை உடைக்கணுமுன்னு வாயுக்குள்ளேயே வைச்சிருந்து எவ்வளவோ முயற்சி  செஞ்சேன். ஓண்ணுமே சரிவரல்ல.


பாட்டி ஒரு வாரமா இந்தப் பாக்கை வாயுக்குள்ளேயே வைச்சிருந்தியா எனக்கேட்டார் நம்ப கதாநாயகன்.
ஆமா. ஏன் கசக்குதா என்று பாட்டி கேட்டாள்.

அன்னிக்கு அந்த வீட்டைவிட்டு ஓடத்தொடங்கிய நம்ப கதாநாயகனை யாரும் கண்டதாகத் தகவல் இல்லீங்க.

Sunday, January 6, 2013

காமெடி கதைகள் - 1

மகாராஜா ஒருவர் தான் வாழ்க்கையில் காணத பழம் ஒன்றை கொண்டுவந்து தரும் தனது நாட்டு பிரஜைககு தனது நாட்டிலுள்ள ஒரு ஊரை பரிசாக தருவதாகப்  பறை சாற்றினான்.
லட்சக் கணக்கானோர் அரசனுடைய மாளிகைக்கு வெளியே வரிசையில் தமது அதிர்ஷ்டத்தை பரீட்சிக்க வந்து நின்று கொண்டிருந்தனர்.

இதைப் பார்த்துப் பயந்த அரசன் தனது முடிவில் சில மாற்றங்களைக் கொண்டுவந்தான். அதில் ஒன்று தான்  அப் பழத்தை ஏற்கனவே  பார்த்திருந்தால்  அதனை முழுதாக விழுங்க வேண்டும் என்பதாகும் .

இதை கேட்டவுடன் மாம்பழம் வாழைப்பழம் போன்றவற்றுடன்  நின்றவர்கள் எல்லாம் ஓட்டம் பிடித்தனர்.
மற்றவர்கள் மனமாற்றம் இன்றி வரிசையில் நின்றனர்  ஒருவர் தேசிக்காயை அரசனுக்கு காட்டினர் . அரசன் அதை பார்த்துள்ளதாக கூறினான. மனமுடைந்த அவர் அரசன் ஆணைப்படி அந்த தேசிக்காயை முழுதாக விழுங்கினார்.

அடுத்து  வந்த விளாம்பளக்கரரும் கஷ்டத்துடன்  அந்த விளாம்பழத்தை  முழுதாக விழுங்கினார்.

சிரிப்புடன் வந்த பபபா பழக்காரரும்  அழுதபடி அதனை விழுங்கினார்.

பின்னால் வந்தவர் அன்னாசிப்பழம்  கையில் ஏந்தியவண்ணம் அரசனைப் பார்த்து தலை வணங்கி பரிசைக் கேட்டான். அரசன் கோபத்துடன் தன அப் பழத்தை பர்த்துளதாக கூறி அதனை விழுங்க சொன்னான்.

அன்னாசிப்பழம் கொண்டுவந்தவன் அதை விழுங்குவதும் பின்னர் அதனை வெளியே எடுத்து சிரிப்பதுவுமாக இருந்தான். அவன் வாய்  எல்லாம் ரத்தம் ஓடியபடி இருந்தது. அப்படியும் அவன் சிரிப்பை விடவில்லை.

அரசன் பயங்கர கோபத்துடன் ஏன் இப்படி சிரிக்கிறாய் என்று கேட்டான் .
 அதறகு அன்னாசிப்பழம் கொண்டுவந்தவன் சொன்னான், ராஜாவே நான்  இந்த அன்னாசிப்பழத்துடன் இந்த கஷ்டப்படுகிறேனே பின்னால்  ஒருவன் பலாப்பழத்துடன் அவன் அதனை எப்படி விழுங்கப்போகிறான் என்பதை நினைக்கும் போது இந்த கஷ்டத்துள்ளும் என்னால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை என்றான்.

அரசன் உடனடியாக  பலாப்பழத்துடன் நிற்பவனை  உள்ளே  வர சொல்லி ஆணை இட்டான். அவன் மகா புத்திசாலி. அன்னாசிப்பழத்துடன் இவன்  படும் கஷ்டத்தை கேள்விப்பட்டவுடன் உடனடியாக பழத்தை வெட்டி அதிலொரு சுளையை மட்டும் எடுத்தக் கொண்டு ராஜா முன் நின்றான்.

அரசன்  தான்  அப் பழத்தை பர்த்துளதாக கூறினாலும் அவனது புத்தி சாதுரியத்தை பாராட்டி சொன்னபடி தனது பரிசை அவனுக்கு வழங்கினான்.
அந்த ஊர் தான் இன்று பழவூர் எனவிருந்து இன்று பளை என்ன அழைக்கப் படுகிறது.

Friday, January 4, 2013

ஜாதி சங்கக்காரங்களையும் ரீவீ காரனுங்களை கவிழ்த்த கமல்.


சுப்பர்ஸ்ரார், தல, தளபதி என அவனவன் (அவளுங்களுந்தான்) தமது தலைவரின் பட ரீலிஸ் அன்னிக்கு தியேட்டருங்க முன்னாடி ஒரு பெரிய திருவிழாவே நடத்தி அந்த தியேட்டர் வீதியை உண்டு இல்லைன்னு பண்ணிடுவாங்க.
அப்புறமா தியேட்டருக்குள்ளாற போயி சாவகாசமாக படத்தைப் பாப்பானுங்க.

அப்புறமா பாருங்க இந்த திருவிழா கூட்டத்துக்குள்ளாற அடிபட்டு மிதிபட்டு கால் கடுக்க நின்னு காசைக் கொடுத்து பஸ்டு பஸ்டா படத்தை பாக்குறதுக்குன்னே ஒரூ கூட்டமிருக்காங்க.
இவங்க படத்தை பார்த்துட்டு வரும் அழகே அழகு. அப்பத்தான் குளிச்சிட்டு தலதுவட்டாத போல உள்ளே போன வேகத்தை விட அதிவேகத்தில வெளியே வருவாங்க. அத்தோட விட்டாங்களா சகல நண்பர்களுக்கும் கோல் எடுத்து தலவரோட படம் பாத்துக்கிட்டிருந்தனா அதுதான் ஒன்னோட கோலை அற்றரண் பண்ணமுடியலை எம்பான். மறுமுனையிலிருந்து நான் உனக்கு கோல் எடுக்கவேயில்லையே என அலறுவது அருகில் நிற்கும் அனைவர்க்கும் கூட கேட்கும்.
சரி மேட்டருக்கு வருவோம். கமல் சார் படம் தியேட்டரில் இல்லத்தானே ஜனங்க படத்தை பார்த்துட்டு வரும் போது நம்ப ரீவீ காரனுங்க இம்மா ஸைசு மைக்கொன்ன பிடிச்சுக்கிட்டு படம் எப்படிங்கன்னு கேட்டுகிட்டேயிருப்பாங்களா?
நம்பாளுங்களும் ஒன்னொன்னு சொல்லிக்கிட்டே போவாங்களா?

கமல் சார் படத்திக்கு இந்த சான்சே இல்லாம போயிடிச்சே. இனி ரீவீ காரனுங்க இதுக்காக வீடு வீடா திரியணுமோ? இல்ல நல்ல விலைக்கு கமல் சார் இந்த படத்தை டிரக்கடா ரீவீயிலேயே போட்டு தியேட்டகாரங்களை கவுத்திடுவாரோ?

அப்புறம் இன்னொண்ணுங்க நம்ப ஜாதி சங்கக்காரங்களையும் சான்ஸ் இல்லாம பண்ணிட்டாருங்க. நம்ப ஜாதி சங்கக்காரங்க தியேட்டருங்க முன்னாடி நின்னு நம்ப தலைவரை, ஆளுங்களை அப்பிடி சொல்லிட்டார் இப்பிடி காமிச்சுட்டாரென ஆர்ப்பாட்டம் பண்ணமுடியாமலும் செஞ்சிட்டாரே?

படிச்சவரே சொன்னது சரியா பிழையா?
எதுன்னாலும் நான் ஜகா வாங்கமாட்டேன்.

 

Thursday, January 3, 2013

ஏர்போட்டில் பப்பிளிக்கா ஒன்னுக்குப் போன நடிகர்-வீடியோ.

ஏர்போட்டில் பப்பிளிக்கா ஒன்னுக்குப் போன நடிகர்.
பயணிகள் விமானம் ஏறுவதற்காக காத்திருக்கும் மண்டபத்தில் இந்த 26 வயது நடிகர் எவரையும் சட்டை செய்யாமல் சகலரும் பார்க்கும் வண்ணம் அந்த மண்டபத்தில் ஏக அமர்க்களமாய் இதனைச் செய்துள்ளார்.

வேறு ஒன்றுமல்ல மிக நல்ல இளைஞன் குடிபோதையில் இவ்வாறு நடந்து கொண்டுள்ளளார். 'ரூவிலைற்'  மூலம் பிரபலமான புறன்ஸன் பெல்ரியரே இவ்வாறு அமெரிக்க லொஸ்ஏன்ஞலிஸ் விமான நிலையத்தில் நடந்து கொண்டுள்ளார்.

அவ்விடத்திற்கு விரைந்த அமெரிக்க பொலிஸ் அதிகாரி அவரை நிலத்தில் வீழ்த்தி கைவிலங்கிட்டு அழைத்து சென்றுள்ளார்.

போது இடத்தில் குடிபோதையில அநாகரீகமாக நடந்ததற்கு இவருக்கு 6 மாத சிறையும் 1,000 டொலர் அபராதமும் இம்மாதம் கிடைக்கலாம்.

Twilight' Actor Bronson Pelletier PEEING in the Airport Terminal.




Wednesday, January 2, 2013

இந்த தியேட்டர் ஓனர்களை ஓட ஓட உதைச்சா என்னாங்க?

இந்த தியேட்டர் ஓனர்களை ஓட ஓட உதைச்சா என்னாங்க?

இன்னி டேற்ல திமிரு பிடிச்ச கமல் டீடீஎச்லயும் விஸ்வரூபத்தை போடுவேன்னுட்டாரு. தியேட்டர் ஓனர்மாரு கூட்டம்போட்டு கமல் படம் எதனையும் தியேட்டர்ல காட்டமாட்டேன்னுட்டாங்க. அத்தோட விட்டாங்களா இனி டீடீஎச்ல போடுற எந்த படத்தையும் தியேட்டர்ல காட்டமாட்டோம்னு சத்தியம் வேற செய்யிறாங்க.

யப்பா ஓனர்மாருங்களே காலத்திற்கேற்ப உழைப்பதற்காக நீங்கமட்டும் மாறலாம். மத்தவங்க மாறப்படாதா?
ஒங்க தாத்தாமாரா தியேட்டர் கட்டும்போது ஏசி, box plan, digital sound, dolby,  balcony, canteen, bar, பார்க்கிங், எல்லாம் போட்டுக்கட்டினாங்க?. நீங்கதானே வருமானம் கூடணுங்கிறதுக்காக இதெல்லாம் செஞ்சீங்க. இன்னமும் செய்யுறீங்க.
கமல் ஏதும் புதுசா செஞ்சு போட்ட பணத்தையும் லாபத்ததையும் எடுக்கணும்னா நீங்கெல்லாமா சேர்ந்து ரூம் போட்டு குடிச்சிட்டு வந்து விடமாட்டோம்னு நிக்கிறீங்களே கேனப்பயலுகளா.

யப்பா தியேட்டர் ஓனர்மாருங்களே நீங்கதானே விஜய் படம் ஊத்திக்கிடிச்சு தல படம் ஊத்திக்கிடிச்சு என பணங்கேட்ட ஆளுங்க?
மறக்கமாட்டோம்.
அதென்ன பிட்டு படம் போட்டு காலத்தை தள்ளலாமுன்னு பாக்கிறீங்களா பன்னாடய்ங்களா?

தெரிஞ்சுக்கங்க டீடீஎச்லயோ இல்ல அடுத்த மாநிலத்தில சரி இந்தப்படத்தை நாங்க பாக்கத்தான் போறம்.
உங்களுக்ககுத்தான் நட்டம்.
தெளிவா சொல்றம் படத்தை போடு. ஊரோட ஒத்ததுப்போ.

ஆனானப்பட்ட அமெரிக்காவிலேயே தியேட்டர் பிஸினஸ் படுத்துப்போச்சு. ரவு ஸோவுக்கு பொண்ணுங்க  வரமாட்டாங்களாம் அதால பசங்களும் வரமாட்டாங்க. பிஸினஸ் நாறப்போவுது.
தெளிவா சொல்றம் படத்தை போடு. ஒம் பொண்ணோட கல்யாணத்துக்கு பணம் சேரும்.
இந்தக் கட்டுரை சார்பான மற்றவர்களின் பதிவுகள்

விஸ்வரூப வில்லங்கங்கள்-ஒரு அலசல்

DTH தொழில்நுட்பம் : திருட்டு வீடியோ பதிவு செய்ய முடியுமா?

இதைப் படிச்சவங்களே என்ன நினைக்கிறீங்க?
அவுங்க படத்த   போடணும்தானே?.
அவங்களுக்கு ஒறைக்கிற மாதிரி இங்க எழுதுங்க.
அப்படிப்போடு  சப்போர்ட்ட .