Tuesday, September 7, 2010

மிஸ்கோல் மன்னர்கள்.


மிஸ்கோல் மன்னர்கள்.
மொபைல் போன்களை எதுவித தேவையுமின்றி எல்லோரும் வாங்குகிறார்களென வாங்கி விட்டு கோல் ஒன்றும் வருகுதே இல்லையெனப் புலம்பிக் கொண்டிருக்கும் 75 வீதமானோரே மிஸ்கோல் மன்னர்கள,; ராணிகளாக மாறுபவர்கள்.
ஆரம்பத்தில் தமது நண்பர்களுக்கு மிஸ்கோல் போட்டுப் பார்ப்பார்கள். அவர்களெடுத்து ஏன் மிஸ் கோலென்றால்
1. போனில காசு குறைவாயிருந்தது ஆனால் உன்னோட கதைக்கவேணும் போலிருந்தபடியுhல் மிஸ்கோல் போட்டனான் என்பார்கள்.
2. பக்கத்தில் றீலோட்போட இடமில்லை.
3. உங்களுக்கத்தான் இலவச நிமிடங்களுள்ளனவே கதையுங்களேன்..
4. போன் றிங் பண்ணுதா எண்டு பார்த்தனான்.
5. மிஸ் கோலொண்டு இருந்தது அழிச்சுப் போட்டன். பிறகுதான் உங்கடையோ எண்டு அடிச்சுப் பார்த்தன்.பிறகு டக்கெண்டு நிப்பாட்டிவிட்டன்.
6. சின்னவன் வைத்து விழையாடிக் கொண்டிருந்தவன் அடிச்சிட்டான் போல இருக்கு.

வேற ஏதும் இருந்தா போட்டுத்தாங்கோ இங்க போடுவதற்கு.
பின்னர் முன்னேறி பத்திரிகை புத்தகங்களிலுள்ள மொபைல் போன்களது இலக்கங்களுக்கு கோலடித்துப் பார்ப்பார்கள். லாண்ட் லைன் பக்கமே போகமாட்டார்கள். தப்பித்தவறி எடுத்து விட்டால் மிஸ்கோல் சந்தோசமும் போய் போன்ல இருந்த காசும் போய்விடும்.
அண்மையில் நண்பரொருவர் தமது சேவை ஒன்றைப் பற்றி பத்திரிகையில் விளம்பரமிட்டாராம்.
எஸ்எம்எஸ் மூலம் பெயரையும் விலாசத்தையும் தனது மொபைலுக்கு அனுப்பினால் முழுவிபரத்தையும் தபால்மூலம் அனுப்புவதாக. அடப் பாவிகளே இரக்கமில்லாமல் ஒருநாளைக்கு 15 மிஸ்கோல் போடுகிறார்களென அழுதார்.
அடுத்த நொக்கியா மாடல் மிஸ்கோல்காரருக்குச் செலவு வைக்கும் மொடலாம்?

No comments:

Post a Comment