Wednesday, February 20, 2013

உணவுப் பழக்கங்கள் தொடர்பான கருத்துக்கள்

உணவுப் பழக்கங்கள் தொடர்பான கருத்துக்கள்.






இதுதான் உண்மையென காலங்காலமாக நினைத்து வருபவையை 'இல்லை, இக்கருத்து தவறானதொன ஏதோவொன வழியில் நீங்கள் அறியவரும்பொழுது அது உங்கள் மனதுக்கு கஷ;டமாக இருந்தாலும் சில நேரங்களில் ஆச்சரியத்தையும் தருகின்றது அல்லவா? உணவு பழக்கவழக்களும் தொடர்பாக பலருக்கும் இருந்துவரும் சந்தேகங்களும் அல்லது தவறான கருத்துக்களுக்கு இதோ சில மாற்று கருத்துக்கள்.

 
எமது எலும்பு,பல் வளர்ச்சிக்கு கல்சியம்
  அவசியம் என்பது யாவரும்
அறிந்தவொன்றே. பாலினாலான உணவுப்
பொருட்களை உட்கொள்வதன் மூலம் எமது
உடலுக்கு தேவையான கல்கியத்தை பெற்றுக்
கொள்ளலாம் என்பது எல்லோரினதும்
பொதுவான கருத்தாகும்.பால் மாற்றும் யோகட்
மூலம் நிச்சயமாக போதியளவு கல்சியத்தை
பெற்றுக் கொள்ளலாம் ஆனால் பால்
பொருளான பனீரின் மூலம் தேவையான அளவு
கல்சியத்தினை பெற்றுக்கொள்ள முடியாது.
கல்சியத்தி;ன் மூலப்பொருள் பனீரே என்பது
இன்று பலரின் மத்தியிலும் நிலவி வரும் ஒரு
தவாறான கருத்தாகும்.பனீரை புரத்தின் மூலப்
பொருளாக கொள்ளலாம்.ஏனைய பாற்
கட்டிகளை விட இதில் மிகவும் குறைந்தளவு
கொழுப்புச் சத்தே உண்டு.எனவே டயட்
செய்வோருக்கு பனீர் ஒர் சிறந்த உணவாக அமையும்.
  அளவுக்கதிகமாக இனிப்பு பண்டங்களை
உட்கொள்வதால் நீரிழிவு நோய் ஏற்படுமென்பது தவறான அபிப்பிராயமாகுமென மேலைத்தேய வைத்தியர்கள் கூறுகின்றனர். ஆனால் அளவுக்கதிகமாக உடற்பருமன் அதிகரித்தல் இந்நோய்க்கான காரணமாகும். இனிப்பு பண்டங்களை விரும்பாத, உடற்பருமனானவர்களுக்கு கூட நீரிழிவு நோய் ஏற்படலாம் என்கிறார்கள் வைத்தியர்கள்.
பழங்களில் மற்றும் காய்கறிகளில் (கரட், வெள்ளரிக்காய்) இருந்து பெறப்படும் ஜுஸ் உங்களுக்கு நல்லதுதான். ஆனால் அப்பழத்தையோ அல்லது காய் கறியையே முழுதாக உண்ணும் போது கிடைக்கும் போசணைக் கூறுகள் அனைத்தும் இந்த ஜுஸை மட்டும் பருகுவதால் கிடைக்காமல் போகின்றது.


குறிப்பிட்ட ஒரு காய்கறியினாலோ அல்லது பழத்தினாலே குணமாக்க கூடிய நோயை (மிக்ரெயின், ஆர்த்ரைட்டிஸ், வேறு சில நோய்கள்)இதிலிருந்து பெறப்படும் ஜுஸ் குணமாக்கக்கூடிய வல்லமையை இழந்து விடுகின்றது.
ஆனால் ஆரஞ்சு ஜுஸ் ஒரு ஆரஞ்சு பழத்தை விட அதிகளவு விற்றமின் 'சி'யினை கொண்டுள்ளது. ஜுஸை மட்டும் பருகுவதனால் பழத்திலிருந்து கிடைக்கக்கூடிய ஏனைய போசனை கூறுகளை பெற்றுக்கொள்ள முடியாமல் போகின்றது. இதே போன்று ஒரு கோப்பை கெரட் ஜுஸிலும் ஒரு கெரட்டிலுள்ளதை விட அதிகளவு நார் சத்தை இழந்து விடுகின்றோம்.
சில தாய்மார்கள் தங்கள் பிள்ளை ஒல்லியாக இருப்பதைக் கண்டு மனம் வருந்துகிறார்கள். போஷhக்கு குறைபாடு எனக்கருதி, தங்களுக்கு தெரிந்த விற்றமின் மாத்திரைகள் எல்லாவற்றையும் வாங்கிக் கொடுப்பார்கள்.
ஒரு சாதாரண மானிட உடலினால் ஓர் குறிப்பிட்டளவு விற்றமினே அகத்துறிஞ்சப்படும். அளவுக்கதிகமாக நாம் உட்கொள்ளும் விற்றமின்களின் மிதமிஞ்சியவை கழிவாகவே அகற்றப்படும். அதனை விட எமக்கு தேவையான விற்றமின்களை நாம் மாத்திரையாக
உள்ளெடுப்பதைவிட தகுந்த உணவின் மூலம் அதனை பெற்றுக்கொள்வதே சிறந்ததாகும்.
வயிற்று வலியா? உடனேயே பார்லி, சோடா வாங்கி அருந்தினால் சரியாகும் என நினைக்கிறீர்களா? வயிற்றில் உபாதைகள் ஏற்படும்போது கூடியளவு பானங்களை (காபனேட் பானங்கள்) தவிர்த்து உலர்ந்த உணவுகளை உட்கொள்ளுங்கள் அதுவே வயிற்றுக்கு நல்லது.

 

No comments:

Post a Comment