Wednesday, February 20, 2013

பப்பாளி பழத்தின் பயன்கள்...

பப்பாளி பழத்தின்  பயன்கள்...




பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உடல் வளர்ச்சி துரிதமாகும்.
எலும்பு வளர்ச்சி,பல் உறுதி ஏற்படும். பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டால் பருமனான உடல் படிப்படியாக மெலியும்.
       தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும.; பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும்.நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி,ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கும் மாறி.முகம் அழகு பெறும்.

பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிகள் அழிந்துவிடும்.பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண்,புண்கள் மேல் பூச புண்கள் ஆறும்.பப்பாளிப் பாலை குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் பூசி வர புண்கள் ஆறும்.பப்பாளி இலைகளை அரைத்து கட்டி மேல் வைத்துக் கட்டினால் உடையும்.
பப்பாளி இலைகளை பிழிந்து எடுத்து வீக்கங்கள் மேல் பூசி வர வீக்கம் கரையும.;பப்பாளி விதைகளை அரைத்து தேள் கொட்டிய இடத்தில பூச வலி.விஷம் இறங்கும். பப்பாளி காய் குழம்பை, பிரசவித்த பெண்கள் சாதத்தில் சோர்த்துவர பால் சுரப்பு கூடும்.  
 

No comments:

Post a Comment