Friday, August 24, 2012

நயினாதீவு பயணம் 2012

நயினாதீவு பயணம் 2012.
தற்போது யாழப்பாணம் குறிகாட்டுவான் துறைக்கான வீதி குண்டு குழிகள் இன்றி மிக நன்றாக உள்ளது. ஒரே ஒரு குறை பண்ணை ரோடு ஒடுக்கமாகவுள்ளது, இதன் காரணமாக எதிர் எதிராக வரும் பஸ்கள் குறித்த இடங்களில்தான் ஒன்றையொன்று தாண்ட முடியும். மற்றும்படி பிரயாணத்தில் எதுவித அலுபுமில்லை. மண்கும்பான் பகுதி ரோடு கைவே மாதிரி எனவே பஸ் 60 - 70 km ஸ்பீடில் பறப்பதை அனுபவிக்க முடிந்தது.
டிக்கெட் இனது தமிழும் மாறிவிட்டது டிக்கேட் எனத்தான் கண்டக்டர் சொல்லுகிறார். இந்த ரோட்டில் உள்ளவர்கள் எல்லாம் பஸ் டிரைவர்களின் நண்பர்கள் எனவே அவர்கள் இறங்க விரும்பும் இடங்களில் எல்லாம் பஸ் நின்று ஆட்களை இறக்கும் ஏற்றும். sunglass தொப்பி என்பன பயணத்தில் உதவியாக இருக்கும். மதிய உணவு ஆலய மடத்தில் இலவசமாக வழங்கபடுகிறது. வெளி கடைகளில் கொக்கா கோலா போன்றவை கூலாக வாங்கலாம் 5 - 1 0 ரூபா கூடுதலாக கொடுக்கவேண்டி இருக்கும்.

யாழில் இருந்து காலை 6.00 மணிக்கு நயினாதீவு அம்பாளை தரிசிக்க பயணத்தை சத்திர சந்தியில் பொன்னம்மா மில் உன்னால் ஆரம்பிப்பது நல்லது, இங்கு வைத்து  CTB , Private பஸ்களை  பிடிப்பது மிக இலகுவானது.
2 மணிக்கு கோவிலில் இருந்து பயணத்தை மீள ஆரம்பிப்பதும்  நல்லது


யாழப்பாணம் நயினாதீவு பயணம் பஸ் கட்டணம் Rs 75/-
ஒரு மணி நேர பஸ் பயணம். குறிகாட்டுவான் துறைக்கு.
20 - 30 நிமிட படகு பயணம் பெரிய படகு rs .50/- சிறிய படகு 30/-
நயினா தீவில் உள்ளூர் பஸ் சேவையும் உண்டு























3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

படங்கள் செய்திகளை சொல்கின்றன...

தொடருங்கள்... நன்றி...

Muruganandan M.K. said...

அழகிய புகைப்படங்களுடன்
இனிய பதிவு.

Samy said...

article and photos looks nice. next time I try to visit. samy

Post a Comment