Saturday, August 25, 2012

நல்லூர் மிகமிக கட்டுப்பாடான புனிதபூமியாக மாற்றப்படுகிறது.

நல்லூர் கோவில் கட்டுப்பாடுகளுக்கு பிரசித்தமான ஒன்று. எற்கனவே ஆண்களின் உடை சம்பந்தமாகவும் குறித்த நேரத்துக்கு பூசைகள் நடப்பது சம்பந்தமாகவும் உள்ளவை மிகவும் பிரசித்தம்.

 கோவிலினுள் கடமையாற்றும் பொலிஸ்காரர்கள் சேர்ட் பனியன் இன்றியே கடமையாற்றுகின்றனர். அது போல கோவிலினுள் செல்லும் ஆண் பக்தர்கள் மற்றும் பார்வையாளர்கள் சேர்ட் பனியன் இன்றியே செல்லவேண்டும். சிகப்பு சால்வை கட்டியபடி உள்ள  கோவில் பணியாளர்கள் இவற்றை கவனித்துக்கொள்வார்கள்.

நல்லூர் திருவிழா காலத்தில் முன்னரைவிட இவ்வருடத்தில் (2012) கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன என்றே சொல்லலாம்.
நல்லூர் திருவிழா காலத்தில் சுவாமி வீதிவலம் வரும்போது ஆண் பக்தர்கள் மற்றும் பார்வையாளர்கள் சேர்ட் பனியன் உடன் சுவாமிக்குக் கிட்டவாகச் சென்றால் சிகப்பு சால்வை கட்டிய கோவில் பணியாளர்களால் கிட்டே நிற்கவேண்டாமெனக் கலைக்கப்படுகின்றார்கள். மேலும் நல்லூர் திருவிழா காலத்தில் வெளி வீதியினுள் வரும் முன் காலணிகளை அங்கு கழற்றும்படி கோரப்படுகிறார்கள். அதாவது நல்லூர் திருவிழா காலத்தில் வெளிவீதியில் கூட காலணி போடத் தடை. கண்ட இடத்தில் தேங்காய் உடைத்தல் தடை. தீச்சட்டியில் நீங்கள் கற்பூரம் போடமுடியாது கோவில் பணியாளர்களிடம் கொடுத்துதான் அதைப் போடவேண்டும், உங்கள் பாதுகாப்புக்காக.

மாலை திருவிழா முடிந்தவுடன் இரவு 10 – 11 வரை நடந்து – ஓடி - விளையாடும் ஜீன்ஸ் போட்ட இளைஞர்களுக்கு எதுவித கட்டுப்பாடுகளும்  கிடையாது.

ஆனால் ஒரே ஒரு கேள்வி. இந்த கட்டுப்பாடான சைவக் கோவிலைச் சுற்றவர ஒரு கடையில் 150 பேர் வரை அமர்ந்து ஐஸ்கிறீம் சாப்பிடக்கூடியவாறாக 5 – 6  ஐஸ்கிறீம் கடைகள் உள்ளன. இந்த பக்தகோடிகளும் அரோகரா என்று சொல்லி முருகனைக் கும்பிட்டுவிட்டு வந்து இங்கு முட்டை கலந்த ஐஸ்கிறீம் சாப்பிடுகிறார்களே நியாயமா?








No comments:

Post a Comment