Tuesday, August 28, 2012

கொழும்பு கோல்பேஸ் கடற்கரைக் கூத்து.

             
கொழும்பு கோல்பேஸ் கடற்கரை  20, 30 வருடங்களுக்கு முன்னரிருந்த தோற்றத்தை இழந்துவிட்டாலும் சில புதுப்பொலிவுகளைப் பெற்றுள்ளது. வரிசையாக நடப்பெற்றுள்ள பனைமரங்கள் மக்களிடையே மலர்ந்திருந்த கடைகள் வரிசையாக ஓரங்கட்டப்பட்டுள்ளன.
உயரமான இலங்கைக் கொடிக்கான கொடித்தம்ப மேடையும் அதில் கொடியேறு;றும் இறக்கும் பணிக்கட்டைளைகளும் அதைச்சார்ந்து கடலுக்கு மேலாக நீண்டதூரம் சென்று பார்வையிடக்கூடிய பாலம் போன்ற கட்டுமானமும் மக்களை வெகுவாகக் கவர்கின்றன.
கொழும்பு கோட்டையிலிருந்து பஸ் கட்டணம் ரூ 9ம், வெள்ளவத்தையிலிருந்து ரூ 16ம் ஆகும்.
முன்னரெல்லாம் பகல்நேரத்தில் குடைகளினுள் காதல் மொழிபேசிய வண்ணமிருக்கம் ஜோடிகள் ஏராளம். இப்போது இவர்களின் எண்ணிக்கை வெகுவாகக்  குறைந்துவிட்டது. காரணம் பொலிஸார் இவர்களைப் பிடித்துச் சென்று கட்டாயத் திருமணம் செய்து வைப்பதாக வெளிவந்த வதந்தியேயாகும்.

இங்கு வெளிநாட்டு உல்லாசப்பயணிகளையும் இடையிடையே காணலாம். எனினும் உள்ளுர் பயணிகளை அதுவும் பாடசாலை விடுமுறை நாட்களில்  பெருந்தொகையான எண்ணிக்கையில் காணமுடியும். கடலில் இறங்கி நீராட வேண்டாமெனும் அறிவித்தற் பலகையிலுள்ள அறிவித்தலையும் மீறி கடலில் இறங்கி விளையாடுவோர் ஏராளம். அவர்களில் ஒரு சிலர் காணாமற்போவதுமுண்டு.

இங்கு மக்கள் வீதியோரக் கடைகளில் விற்கும் இறால் வடை, நண்டு வடை போன்றவற்றை விரும்பி உண்பர். கொத்து ரொட்டி, ப்ரயிட் றைஸ் போன்றவையும் இங்கு பிரசித்தம். கூல் பியர் சேவையுமுண்டு அதற்கென பிரத்தியேக நடமாடும் சேவையுமுண்டு.
வெளிநாடுகளிலிருந்து வரும் தமிழர்கள் தமது குடும்பத்துடன் மாலை வேளைகளில்
இங்கு வருவர். அநேகமான குடும்பத் தலைவர்கள் ஏதாவது சாட்;டுப்போக்குச் சொல்லி குடும்பத்தினரிடமிருந்து தலைமறைவாகி விடுவர். பின்னர் 1,2 மணிநேரத்தின் பின் அரைப்போத்தல் சாராயம் அடித்த சந்தோசத்தில் நாலு காலில் நடந்தபடி கமகம வாசத்துடன் குடும்பத்தினருடன் ஒன்றிணைவர். மனிசிமார் திட்டுவதை நேரடியாகக் கேட்கலாம். என்னண்டுதான் இது விக்கிற இடங்களைக இது  கண்டு பிடிச்சுக் குடிக்குதோ, இப்ப என்னெண்டு அக்கா வீட்டை போறது? மரியாதை கெடப்போகுதே எண்டு புலம்புவர்.

மீண்டும் பஸ்ஸில ஏறி வீடு போகும்போது ஜேர்மன், பிரான்ஸ், இத்தாலி என தான் வசிக்கும் நாட்டு மொழியில் ரூபா 500 நோட்டை இழுத்து ரிக்கற்றுக்கென கண்டக்டரிடம் கொடுப்பார். விசயந்தெரிந்த கண்டக்டர் மிச்சக்காசை கொடுக்காமல் பணத்துடன் முன் வாசலுக்கு போய்விடுவான். மனிசி மிச்சக்காசை வாங்கப்பா மிச்சக்காசை வாங்கப்பா எண்டு கிண்டுவா. அவருக்குத் தெரியும் ஓடற பஸ்ஸல போட்ட தண்ணியோட நாலு காலில முன்னால நடந்து போய் மிச்சக்காசை வாங்கிறத விட சீற்றுக்குள் கால்விட ஏலாதெண்டு திட்டிக்கொண்டு வீட்ட போறது மேல் எண்டு.



                                                                                                                      


1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

அறியாத பல தகவல்கள்... பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி... தொடர வாழ்த்துக்கள்...

Post a Comment