Sunday, January 6, 2013

காமெடி கதைகள் - 1

மகாராஜா ஒருவர் தான் வாழ்க்கையில் காணத பழம் ஒன்றை கொண்டுவந்து தரும் தனது நாட்டு பிரஜைககு தனது நாட்டிலுள்ள ஒரு ஊரை பரிசாக தருவதாகப்  பறை சாற்றினான்.
லட்சக் கணக்கானோர் அரசனுடைய மாளிகைக்கு வெளியே வரிசையில் தமது அதிர்ஷ்டத்தை பரீட்சிக்க வந்து நின்று கொண்டிருந்தனர்.

இதைப் பார்த்துப் பயந்த அரசன் தனது முடிவில் சில மாற்றங்களைக் கொண்டுவந்தான். அதில் ஒன்று தான்  அப் பழத்தை ஏற்கனவே  பார்த்திருந்தால்  அதனை முழுதாக விழுங்க வேண்டும் என்பதாகும் .

இதை கேட்டவுடன் மாம்பழம் வாழைப்பழம் போன்றவற்றுடன்  நின்றவர்கள் எல்லாம் ஓட்டம் பிடித்தனர்.
மற்றவர்கள் மனமாற்றம் இன்றி வரிசையில் நின்றனர்  ஒருவர் தேசிக்காயை அரசனுக்கு காட்டினர் . அரசன் அதை பார்த்துள்ளதாக கூறினான. மனமுடைந்த அவர் அரசன் ஆணைப்படி அந்த தேசிக்காயை முழுதாக விழுங்கினார்.

அடுத்து  வந்த விளாம்பளக்கரரும் கஷ்டத்துடன்  அந்த விளாம்பழத்தை  முழுதாக விழுங்கினார்.

சிரிப்புடன் வந்த பபபா பழக்காரரும்  அழுதபடி அதனை விழுங்கினார்.

பின்னால் வந்தவர் அன்னாசிப்பழம்  கையில் ஏந்தியவண்ணம் அரசனைப் பார்த்து தலை வணங்கி பரிசைக் கேட்டான். அரசன் கோபத்துடன் தன அப் பழத்தை பர்த்துளதாக கூறி அதனை விழுங்க சொன்னான்.

அன்னாசிப்பழம் கொண்டுவந்தவன் அதை விழுங்குவதும் பின்னர் அதனை வெளியே எடுத்து சிரிப்பதுவுமாக இருந்தான். அவன் வாய்  எல்லாம் ரத்தம் ஓடியபடி இருந்தது. அப்படியும் அவன் சிரிப்பை விடவில்லை.

அரசன் பயங்கர கோபத்துடன் ஏன் இப்படி சிரிக்கிறாய் என்று கேட்டான் .
 அதறகு அன்னாசிப்பழம் கொண்டுவந்தவன் சொன்னான், ராஜாவே நான்  இந்த அன்னாசிப்பழத்துடன் இந்த கஷ்டப்படுகிறேனே பின்னால்  ஒருவன் பலாப்பழத்துடன் அவன் அதனை எப்படி விழுங்கப்போகிறான் என்பதை நினைக்கும் போது இந்த கஷ்டத்துள்ளும் என்னால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை என்றான்.

அரசன் உடனடியாக  பலாப்பழத்துடன் நிற்பவனை  உள்ளே  வர சொல்லி ஆணை இட்டான். அவன் மகா புத்திசாலி. அன்னாசிப்பழத்துடன் இவன்  படும் கஷ்டத்தை கேள்விப்பட்டவுடன் உடனடியாக பழத்தை வெட்டி அதிலொரு சுளையை மட்டும் எடுத்தக் கொண்டு ராஜா முன் நின்றான்.

அரசன்  தான்  அப் பழத்தை பர்த்துளதாக கூறினாலும் அவனது புத்தி சாதுரியத்தை பாராட்டி சொன்னபடி தனது பரிசை அவனுக்கு வழங்கினான்.
அந்த ஊர் தான் இன்று பழவூர் எனவிருந்து இன்று பளை என்ன அழைக்கப் படுகிறது.

3 comments:

Post a Comment