Thursday, January 10, 2013

ஆப்ரிக்க தோசையா தமிழ்நாட்டு தோசையா முதலில் தோன்றியது ?

நம்ம ஊரு  தோசையா ஆப்ரிக்க தோசையா முதலில் தோன்றியது என இன்று ஆராய்ச்சி செய்வோமா?
நாம அரிசியையும்   உளுந்தையும்  சேர்த்து  அரைத்து   புளிக்க வைத்து மறுநாள் தோசை சுடுறகிறோம்.
அபிசீனியா என்று  சரித்திர காலத்தில் அழைக்கப்பட்டு தற்போது எதியோப்பியா என்று அழைக்கப்படும் ஆப்ரிக்க கண்ட நாட்டில் எமது தோசைக்கு சமனான உணவு ஒன்று உள்ளது. அதன் பெயா "இஞ்செர" எனப்படும்.
இது உளுந்திலிருந்து செய்யப் படுவதில்லை பதிலாக  teff flour டெப் மாவு என்பதிலிருந்து செய்யப் படுகிறது. இதுவும் தோசை மாவு போல புளிக்கவைத்து பின் தோசை போலவே சுடப்படுகிறது. இந்த தானியம் வெள்ளை, கருப்பு, சிவப்பு எனக் கிடைகிறது எனவே தயாரிக்கப்படும்  "இஞ்செர" வும் இக் கலர்களில் கிடைக்கின்றது.
தொட்டுக்கொண்டு சாப்பிட சட்ட்னி சாம்பார் கிடையாது பதிலாக காரமான உறைப்பு கறிகளை  தொட்டுக்கொண்டு சாப்பிடுவார்கள்.
 இவர்களும் நம்மைப் போல வித விதமான உணவு வகைகளை சமைப்பதில் படு கில்லாடிகள்.

"இஞ்செர"





நம்மூர்  பொண்ணுங்க இல்லிங்க  இவங்க  எதியோப்பிய பொண்ணுங்க..











இது நம்ப  ஊரு தோசைங்கோ - நெட்ல சுட்டதுதாங்கோ.


No comments:

Post a Comment