Wednesday, January 16, 2013

அமெரிக்க வீஸா லொத்தரில் இந்தியர்களுக்கு ஏன் அனுமதியில்லை?

Green card Lottery எனவும் DV Lottery எனவும் அழைக்கப்படும் அமெரிக்க குடியேற்ற வீஸாக்கள் ஒவ்வொரு வருடமும் உலகளாவிய ரீதியில் 50.000 பேருக்கு கம்பியூட்டர் வொத்தர் மூலம் வழங்கப்படுகிறன. இருப்பினும் இந்தியா. பாகிஸ்தான் மற்றும் வேறு சிலநாடுகளையும் சேர்ந்தோருக்கு இந்த லொத்தரில் பங்கு பற்ற அமெரிக்க அரசாங்கம் அனுமதி அளிப்பதில்லை.
ஏன்?
இந்த அமெரிக்க வீஸா லொத்தர் (கிறீன் காட் லொத்தர் எனவும் அழைக்கப்படும்.) ஆனது அமெரிக்காவில் வசிக்கும் பல்லின மக்களினதும் அளவைச் சமப்படுத்தும் வகையில் அங்கு குறைவாகவுள்ள நாட்டு மக்களைக் குடியேற்றும் வகையில் அமெரிக்க அரசினால் இது நடாத்தப்படுகின்றது.
எனவே அமெரிக்க அரசு கடந்த 5 வருடங்களுக்குள் 50,000 க்குக் கூடுதலான அளவில் தமது நாட்டுக் குடியேற்றவாசிகளை அமெரிக்காவிற்கு அனுப்பிய நாட்டில் பிறந்தவர்களை இந்தப்போட்டியில் பங்கு பற்ற அனுமதி அளிக்கவில்லை. அவ்வகையில் இந்திய நாட்டில் பிறந்தவர்களும் வேறு சிலநாட்டில் பிறந்தவர்களும் இந்த அமெரிக்க வீஸா லொத்தரில் பங்குபெற அனுமதி அளிக்கப்படவில்லை.







எனினும் ஒரு இந்தியரின் பிறப்பு அமெரிக்க குடியேற்ற வீஸா வொத்தரில் பங்குபெற அனுமதியளிக்கப்பட்ட நாட்டில் நடைபெற்றிருப்பின் (இலங்கை, ஆபிரிக்க நாடுகளிலொன்றில்) அவர் இந்தப்போட்டியில் பங்கேற்கமுடியும்.
ஒரு இந்தியர் அமெரிக்க குடியேற்ற வீஸா வொத்தரில் பங்குபெற அனுமதியளிக்கப்பட்ட நாட்டில் பிறந்த ஒருவரை மணமுடித்திருப்பின் துணையின் நாட்டினைக் காட்டி இந்த அமெரிக்க வீஸா லொத்தரில் பங்கு பற்ற முடியும். லொத்தரில் வெற்றி பெற்று வீஸாக்கள் கிடைக்கும் பட்சத்தில் அவர் தனியாக அங்கு செல்ல முடியாது கட்டாயம் அவரது துணையுடனேயே செல்லவேண்டும்.

இந்த லொத்தரில் வைத்திருக்கும் பாஸ்போடடோ அல்லது குடியேற்ற அனுமதியோ செல்லுபடியாகாது. உங்கள் பிறப்பு நிகழ்ந்த நாடே இந்த லொத்தரில் பங்கு பற்ற அனுமதியளிக்கமுடியும்.

மேலதிக விபரங்களுக்கு http://www.bbsnetting.com/
 

No comments:

Post a Comment